Saturday 24 December 2011

BEGGAR'S BEER

பிச்சைக்காரன் பீர்

'சுட்டகோழி சுடாத கோழி'யின் தொடர்பாக பிச்சைக்காரன் கோழி'யைப் பற்றியும் எழுதினேன்.
அதற்கும் ஒரு 'பலேபேஷ்' கிடைத்தபடியால் அந்த மடலுக்குத் துணை மடலாக 'போஜனக் கொறடா'வாக இந்த மடலை எழுதுகிறேன். 
பிச்சைக்காரர்கள் தங்களுக்கென்று பிரத்தியேக பானத்தையும் தயாரிப்பார்கள். 
இதற்குப் பயன்படுவது மரவள்ளிக்கிழங்கு. இந்தக் கிழங்கு மிகவும் அதிகமாகக் காணப்படுவது. அதுபாட்டுக்கு வளர்ந்து கிடக்கும். கீரைவகைகளிலேயே மிகவும் மலிவான கீரை குப்பைக் கீரையும் மரவள்ளிக்கீரையும் முருங்கைக்கீரையும்தான். 
மரவள்ளிக்கிழங்கை நன்றாக மசிய வேகவைத்து, தோலை உரித்து விட்டு, அதைப் பிசைந்து கொள்வார்கள்.
பயற்றமுளை என்றொரு காய்கறி வகை இருக்கிறது. பாசிப்பயறுக்கும் தட்டைப் பயிறுக்கும் இடைப்பட்ட பயறு ஒன்று இருக்கிறது. இதை மலேசியத் தமிழர்கள் பயற்றங்காய் என்பார்கள். இது இவர்களின் முக்கிய துணை வெஞ்சனமாக விளங்குவது. 
பயற்றமுளையின் கொஞ்சம் எடுத்து அதையும் சேர்த்து மரவள்ளிக் கிழங்கு மசியலுடன் சேர்த்துப் பிசைந்து கொள்வார்கள். 
இதை வெந்நீர் ஊற்றிக் கரைப்பார்கள். தேங்காய்த் தண்ணீர் சேர்ப்பார்கள்.
பானையில் இந்தக் கரைசலை வைத்து மூடி வைத்துவிடுவார்கள். 
இரண்டு ஆள் கழித்து அதை அப்படியே வடிகட்டி எடுத்துக் கொள்வார்கள். 
இது ஒருவகை பீயர். 
'பிச்சைக்காரன் பீயர்' என்று வேண்டுமானாலும் பெயர் கொடுக்கலாம்.
Homemade Brew.
"பிச்சைக்காரனுக்கு ஏது வீடு?" என்று கேட்கத் தோன்றும்.




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment