Sunday 17 July 2011

TIME AND TIDE

அகத்தியர் குழுவில் 18/07/11-இல் நான் எழுதியது - 

காலமும் கடற்பெருக்கும் - #1

நேற்று நீண்டநாட்களாகப் போட்ட திட்டங்கள் மூன்று நிறைவேற்றப்படமுடியாமற் போய்விட்டன.
நான்கு குறும்படங்களை எடுப்பதற்காக BigFoot Creations முரளி கிருஷ்ணா கேமரா, 
விளக்குகள் சகிதம் கோலாலும்ப்பூரிலிருந்து சுங்கைப்பட்டாணிக்கு வந்திருந்தார்.
இரண்டு வாரங்களாக உடல் நிலை சரியாக இல்லை. தொண்டைக் கட்டு, கரகரப்பு மாறவில்லை. இடுப்புப் பிடிப்பு. 
மதியம் வரை சமாளிக்க முடியுமா என்று பார்த்தோம். முடியவில்லை. அறவே முடியவில்லை. நான்கும் அருமையான டாப்பிக்குகள். இதுவரைத் யாரும் தொட்ட தில்லை. இப்போதைக்கு யாரும் தொடப்போவதுமில்லை. அவையெல்லாம் எடுத்து வெளியிடப்படவில்லையென்றால் அவை தமிழியத்திற்குப் பெரும் இழப்புத்தான். 
சந்தேகமேயில்லை.
ஆகையால்தான் அவ்வளவு ஆர்வமுடன் அவற்றை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. 
அதான்.
முடியும்போது எதையும் செய்துவிடவேண்டும் என்பது. 
Time And Tide Wait For No Man.
பாவம். முரளி கிருஷ்ணா வெறுங்கையோடு திரும்பினார். கோலாலும்ப்பூரிலிருந்து வந்து சுங்கைப்பட்டாணியில் ரூம் எடுத்துத் தங்கி - ரூம் வாடகை, பெட்ரோல் செலவு, இரண்டு நாட்கள்..... வீணாகிப் போயின.
அதான்.
முடியும்போது எதையும் செய்துவிடவேண்டும் என்பது. 
Time And Tide Wait For No Man.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. தங்களுக்காக சேது மாதவனிடம் மனம் நிறைய பிரார்த்திக்கிறேன் ஐயா

    ReplyDelete