Friday 12 August 2011

KAISAR I HIND


கைஸர் இ ஹிந்த்



உலக வரலாற்றில் பிரசித்தி பெற்றவர் ஜூலியஸ் ஸீஸர்.
ரோம சாம்ராஜ்யம் என்பது கிமு. 600- இல் ஏழு குன்றுகளின்மீதிருந்த ஒரு ஊரை மையமாக வைத்து ஏற்பட்ட சாம்ராஜ்யம்.
பல போர்களின்மூலம் விரிவடைந்து கிமு 55 -இல் மேற்கே பிரிட்டன் தீவிலிருந்து தென் ஐரோப்பா முழுவது, வட ஆ·ப்ரிக்கா, துருக்கி, சீரியா பாலஸ்தீனம், ஈராக் ஆகிய பகுதிகள் கொண்ட மிகப் பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.
கிமு 70 இலிருந்து அதன் சக்கரவர்த்தியை ஸீஸர் என்று குறிப்பிடுவது வழக்கமாயிற்று.
ஸீஸர் -Caesar என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்த்னரின் குடிப்பெயர்.
அந்த குடியைச் சேர்ந்தவர்தான் ஜூலியஸ் ஸீஸர். ஸீஸர் என்பது ஜூலியஸின் குடும்பப் பெயர்.
ஜூலியஸ் ஸீஸரை ரோமச் சக்கரவர்த்தியாக ஆக்குவதற்கு அவருடைய நண்பராகிய மார்க்கஸ் அந்த்தோனியஸ் போன்றவர்கள் பெரிதும் முயன்றனர்.
ஆனால் ஜூலியஸ் ஒரு சர்வாதிகாரியாக மட்டுமே விளங்குவதில் திருப்தி கண்டார்.
உண்மையிலேயே அந்தச் சொல் ஸீஸர் என்று உச்சரிக்கப்படக்கூடாது.
அது ஆங்கில வழக்கு.
மூலமொழியாகிய லத்தீனில் அது 'கைஸார்'.
அவருடைய மரணத்துக்குப் பின்னர் அவருடைய அண்ணன் மகனாகிய அக்டேவியனும் மார்க்கஸ் அந்தோனியஸ¤ம் அதிகாரத்துக்கு வந்தனர். அதன்பின்னர் அவர்களுக்குள் நடந்த போரில் அந்தோனியஸ் இறந்தபிறகு அக்டேவியனே தலைமைத்துவத்துக்கு வந்தார்.
அப்போது அவர் அகஸ்டஸ் ஸீஸர் என்ற பெயருடன் பேரரசர் ஆனார். அந்த கால கட்டத்தில் அந்தப் பதவியை ப்ரின்கெப்ஸ் Princeps என்று அழைத்தனர்.
ஆனால் ஸீஸர் என்ற குடும்பப்பெயர் நாளடைவில் பதவியைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. ப்ரின்கெப்ஸ் என்னும் சொல், வழக்கிலிருந்து மறைந்தது.
நீரோ ஸீஸருக்குப் பின்னர் அகஸ்டஸின் குடும்பத்தினரிடமிருந்து ப்ரின்கெப்ஸ் பதவி கைமாறிவிட்டது. வேறு ஆட்கள் பதவிக்கு வந்தார்கள். இருப்பினும் அவர்களையும் ஸீஸர் என்றே குறிப்பிட்டனர்.


பிற்காலத்தில் ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவியின் பெயரும் ரஷ்யச் சக்கரவர்த்தியின் பதவிப் பெயரும் ஸீஸர் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய கைஸர், க்ஸார் என்று வழங்கப்பட்டன.
ஜூலியஸ் ஸீஸரின் தாயின் வயிற்றைக் கீறி அவரை வெளியில் எடுத்தார்களாம். ஆகவே அந்த அறுவை முறையை ஸீஸரியன் என்று அழைக்கலாயினர்.
ஸீஸரியன் என்பது 'ஸீஸர் சம்பந்தமானது' என்று பொருள்படும்.
சமஸ்கிருதத்தில் குரு வம்சத்தினன் கௌரவ என்றும் துருபதன் மகள் த்ரௌபதி என்றும் ஜபலா மகன் ஜாபாலி என்பதுபோல.
ஜூலியஸ் ஸீஸருக்குக் க்லியோபாட்ரா மூலம் ஒரு மகன் இருந்தான்.
அவனுடைய பெயர் என்னவென்று தெரியாது. ஆனால் அவனை ஸிஸாரியன் என்று அழைத்தனர்.


"பிற்காலத்தில் ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவியின் பெயரும் ரஷ்யச் சக்கரவர்த்தியின் பதவிப் பெயரும் ஸீஸர் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய கைஸர், க்ஸார் என்று வழங்கப் பட்டன." என்று எழுதியிருக்கிறேன்.


உருது மொழியிலும் கைஸர் என்னும் சொல் வழங்கியது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி நிர்வாகத்தில் இந்தியா ஒரு காலத்தில் இருந்தது.
விக்டோரியா ராணி காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைக் கலைத்துவிட்டு பிரிட்டிஷ் அரசின் கீழ் நேரடியாகக் கொண்டுவந்தனர்.
அப்போது இந்தியாவில் நேரடியாக ஆளப்பட்ட பிரதேசங்கள் தவிர சுதேசி மன்னர்கள் ஆட்சியில் இருந்த சமஸ்தானங்களும் இருந்தன.
ஆகவே இந்தியாவைத் தனி சாம்ராஜ்யமாக ஏற்படுத்தி, அதன் சக்கரவர்த்தினியாக விக்டோரியா ராணியைப் பிரகடனப்படுத்தினார்கள்.
இந்தியாவின் சக்கரவர்த்தினி என்னும் பொருல்படும் 'கைஸர் இ ஹிந்த்' - 'Kaisar i Hind' என்னும் சிறப்புப் பட்டத்தைக் கொடுத்தார்கள்.
கைஸர் இ ஹிந்த் என்னும் பெயரில் ஓர் உயர்ந்த விருது ஏற்படுத்தப் பட்டது.
அது அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்களில் ஒருவர் - மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி.


அவருக்குப் பின்னர் அவருடைய மகனாகிய ஏழாம் எட்வர்டு மன்னர் எனப்படும் மொட்டைத்தலை ராசா ஆட்சிக்கு வந்தார்.
அவருடைய விருதுப் பெயர்களில் ஒன்று- 'Kaisar-e-Hind'.
Emperor Of India.
இந்தியாவின் சக்கரவர்த்தி.
அவருடைய பேரர் ஆறாம் ஜார்ஜ் வரைக்கும் இந்தப் பட்டம் நீடித்தது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment: