Friday 26 August 2011

WHY CONCEAL?

மறைப்பதன் காரணம்....?


மடற்குழுவிலோ ப்லாகிலோ ·பேஸ்புக்கிலோ எழுதும்போது பல விஷயங்களை முழுமையாகச் சொல்லமுடிவதில்லை. சொல்ல வந்த விஷயங்களைப் பூர்த்தியாக்காமலேயே விடவேண்டியுள்ளது. ஆகவே பல கட்டுரைகள் பூர்த்தியாகாமல் நிற்கும்.
கட்டுரைகளைப் பூர்த்தி செய்யமுடியாமைக்கும் சில காரணங்கள் இருக்கின்றன.
சில விஷயங்களை மறைக்கவேண்டியது மிக அவசியமாகிறது.
ஓர் ஊரில் ஓரிடத்தில் ஒரு மண்டபம். அதில் உள்ள தூண்களில் பெரு விரல் பரிமாணமே கொண்ட சிறு சிறு Miniature தூண்களைச் செதுக்கி யுள்ளார்கள்.
அந்தக் குட்டி தூண்களைச் சுற்றி விரலை விட்டுத் துழாவமுடியும். அதிலும் பல பூவேலைப்பாடுகள் இருக்கும்.
Xylophone என்னும் இசைக்கருவி ஒன்று இருக்கிறது.
அதில் இரும்புக் கலவை, வெண்கலம் போன்றவற்றால் செய்த குழாய்கள், பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். தட்டினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  Note-ஐ ஒலிக்கும். அது ஒரு இசைக்கருவி. ஜலதரங்கம், பியானோ ஆகியவற்றின் அடிப்படையைக் கொண்டது.
இதே மாதிரியாகக் கல்லிலேயே வடித்திருக்கிறார்கள். தட்டினால் வெவ்வேறு ஸ்வரங்களில் ஒலிக்கும். வெவ்வேறு இசைக்கருவிகள் போன்றும் சில குட்டித்தூண்கள் ஒலிக்கும்.
பார்ப்பதற்கு இந்த சூட்சுமம் புரியாது.


அந்த மண்டபத்தைப் பற்றி விரிவாக எழுதினால் என்ன ஆகும்?


காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் ஓரிடம் இருக்கிறது. அங்கு கூரையின் விதானத்தில் பல்லி ஜோடியை வடித்துள்ளார்கள். அவற்றிற்கு மேல் பொன்னாலும் வெள்ளியாலும் தகடுகள் செய்து போர்த்திருக்கிறார்கள். இவற்றின் நேர்கீழே ஏணி இருக்கிறது. அருகில் ஓர் ஆசாமி மேஜை நாற்காலி போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டு டிக்கெட் விற்றுக்கொண்டிருப்பார். டிக்கெட் வாங்கிக்கொண்ட பின்னர் அந்த ஏணியின் மீது ஏறி, அந்தப் பல்லிகளைத் தடவிக் கொடுக்கலாம். அந்த மாதிரி பல்லிகளைத் தடவினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று நம்புகிறார்கள். 'பார்ப்பதற்கு வசூல், தொடுவதற்கு  வசூல்' என்று சுரண்டிக் கொண்டிருப்பார்கள்.
அந்த மண்டபத்தின் இருப்பிடத்தையும் அதன் விசேஷத் தன்மையையும் வெளியிட்டால் என்ன ஆகும்?
போகிறவர் வருகிறவரெல்லாம் தட்டித் தட்டித் தட்டி....... பாவம்..... பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட பெரும் மன்னர்களின் அரிய சிருஷ்டி ஒரே தலைமுறையில் - சில ஆண்டுகளில் வீணாகிவிடும்.
அல்லது ஏதாவது மராமத்துச் செய்கிறேன் என்று காரணம் காட்டி அந்த மண்டபத்தையே பிரித்து அக்குச் சுக்காக்கிக் காசாக்கி விடுவார்கள்.
புதிய அரிய விஷயத்தை வெளியிட்டால், அது உடனடியாகத் திருடப் படுகிறது. வேறு பெயர்களில் வெளியாகிவிடுகிறது. சில ஆய்வுகளுக்கு அவை அப்படியே Lock, Stock, and Barrel-ஆக எடுக்கப்படுகின்றன. ஆனால் யாருடைய Intellectual Property என்பது மதிக்கப் படுவதில்லை.
ஆகையால்தான் பல விஷயங்களை வெளியிடுவதற்கில்லை.




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


No comments:

Post a Comment