Friday 17 June 2011

THE EIGHT-ARMED WONDER


எண்தோள் வீசி நின்ற அற்புதன்


    அப்பர் பெருமான் திருவங்கமாலை என்னும் பாடலைப் பாடியுள்ளார். இந்தக் காலத்திலெல்லாம் இந்த மாதிரியான பாடல்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டன.
    கோயில்களில்கூட யாராவது இந்தக் காலப் பாடகர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப உருக்கமாகக் குரலை வைத்துக்கொண்டு தழுதழுக்கப் பாடிய பாடல்கள், அல்லது டபுக்குடப்பான் டப்பான் டப்பான் என்று தாளம் 
போட்டுக் கொண்டு பாடும் 'சாமிப் பாடல்கள்', அல்லது "காளியம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ ஆஆஆ"....." என்று டண்டனக்கா டணக்குனக்கா என்று உடுக்கு, பம்பை, உருமி, தவில் முதலியவற்றை இடித்து...... ஓ... திருத்தம் திருத்தம் - அடித்து ..... அந்த நிசும்பசூதினியையே திடுக்கிடவைக்கும் பாடல்களைத்தாம் போடுகிறார்கள்.
     இல்லையென்றால் பாம்பே 
சகோதரிகள் பாடிய பாடல்கள்.


    யார் இந்த திருவங்க மாலை, திருநீற்றுத் திருப்பதிகம், கோளறு திருப்பதிக மெல்லாம் பாடுகிறார்கள்?


    "யோவ்..... ரொம்ப இழுக்காதய்யா.... நேரமாயிக்கிட்டு போஹ¤தில்ல? தங்கம்,செல்லமே எல்லாம் போயிறப் போஹ¤து. அந்த ராதிகா புருசனோட கழுத்துல அருவால வெக்கிற எடத்துல விட்டிருக்காம்யா?..... ராதாரவிமேல பழி போடப் பாக்குறா பாவிப் பொம்பள.... வேகமா வேகமா....", என்று கோயில் தலைவர் தேவாரம் பாட வந்த ஆசாமியைப் பார்த்துச் சொல்வார்.

திருவங்க மாலை என்றால் என்னமோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள்.

"தலையே நீ வணங்காய்.....
தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேறும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்"


    இதன் இரண்டாம் அடியை ஒரு முறைப் பாடியபோது......


"கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன் தனை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தனைக்
கண்காள் காண்மின்களோ"

"எண்டோள்'னா என்னங்க?" என்று ஒருவர் தனியாகக் கேட்டார்.
"எட்டுத் தோள்கள். அதாவது எட்டுக் கைகளை வீசி ஆடுவது"
"சிவனுக்கு எப்பவும் நாலு கைதானே இருக்கு. எட்டுக் கை ஏது?"
"இருக்கு....... மாணிக்கவாசகர்கூட பாடியிருக்கார் இல்லையா......?

"அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடமை எல்லாமும்
குன்றே அணையாய், என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ?
இன்றோர் இடையூறு எனக்குண்டோ, எண்டோள் முக்கண் எம்மானே?
நன்றே செய்வாய், பிழை செய்வாய்.... நானோ இதற்கு நாயகமே?"

     அந்த எண்டோள் கொண்ட எம்மானை மேலே உள்ள படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.
    இந்த சிலைக்குத் 'திரிபுர சம்மார மூர்த்தி' என்று பெயர்.  
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



1 comment:

  1. தாத்தா எங்களுக்கு இப்பதிகத்தை படித்து பாடி கண்பித்த ஞாபகம் வருகின்றது..
    அப்படியே அழுது கொண்டே பாடுவார்...
    நாங்கள் அலுத்து கொண்டே கேட்போம்..
    அப்போது சிறுபிள்ளை புரியவில்லை, இப்போது உடல் சிலிர்க்கின்றது

    ReplyDelete