Thursday 23 June 2011

KATTABOMMU -#1

கட்டபொம்மு-#1

வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரின் வரலாற்றில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. 
ஜெகவீரபாண்டியனார் என்னும் பெரியவர் ஒருவர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதிய நூலின்மூலமே 'கட்டபொம்மு வரலாறு' நூல் வடிவில் வெளிவந்தது. அதற்கும் முன்னர் கால்டுவெல் பாதிரியார் போன்றோர் எழுதிய குறிப்புகள்தாம் இருக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களும் நாடோடி இலக்கியமாகவும்கூட அவருடைய வரலாறு விளங்கியது.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் ஒரு சிறு நூலை வெளியிட்டார். 
        'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்னும் அந்த நூலின் முகப்பு அட்டை, உணர்வைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.
அந்த நூல் பிரபலமாகி Best Seller-ஆக விளங்கியது.
அதே நூலின் அடிப்படையில் பந்துலு என்பவர் வரலாற்றுப் படம் ஒன்றைத் தயாரித்தார். அவரேதான் கப்பலோட்டிய தமிழன் படத்தையும் எடுத்தவர். 
சிவாஜி கணேசன்தான் கட்டபொம்மு.  
சிவாஜியின் பெர்ஸனாலிட்டிக்கு ஏற்ப கட்டபொம்முவின் பாத்திரம் கட்டிங் அண்ட் ·பிட்டிங் செய்யப்பட்டது. 
அந்தப் பாத்திரம்தான் இன்று நாம் அறிந்த கட்டபொம்மன்.
ஆனால் கட்டபொம்முவைப் பற்றி வேறு பல கதைகளும் குறிப்புகளும் இருந்தன. அவற்றை யாரும் சீந்துவதில்லை. 
அவற்றை எடுத்துப்பார்த்தபோது முற்றிலும் வேறுவகையான வரலாறு தென்பட்டது. 
பல்துறை வல்லுனராகிய கல்கண்டு தமிழ்வாணன் அவற்றை யெல்லாம் வைத்து ஆராய்ந்து, "கட்டபொம்மு கொள்ளைக்காரன்' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். 
கட்டபொம்முவுக்கு முன்னாலேயே, அவருடைய பாட்டன் பொல்லாப் பாண்டிய கட்டபொம்மு காலத்தியே பிரிட்டிஷ்/ஆர்க்காட்டு ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு வீரருடைய வரலாற்றைத் தொகுத்து, தமிழ்வாணன் அளித்தார். 
அவர்தான் நெற்கட்டுஞ்செவ்வல் குறுநிலமன்னர் புலித்தேவர் எனப் படும் பூலித்தேவர். 
ஆனானப்பட்ட கமாண்டண்ட் கான் சாஹிபையே எதிர்த்து, நின்று பிடித்துப் பார்த்தவர். 
அந்த வரலாற்றின் அடிப்படையில் ஈஆர் சகாதேவன் என்னும் நடிகரை வைத்து நாடகமும் அதன் பிறகு ஒரு படமும் எடுத்தார்.
தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி சிவகங்கைச் சீமை மருது சேர்வைக் காரர்களைப் பற்றி ஆராய்ந்து, 'மருதிருவர்', 'மானங்காத்த மருது பாண்டியர்' என்னும் இரு நூல்களை எழுதினார். 
அத்துடன் 'கான் சாகிப்' என்னும் குட்டி நூலையும் எழுதினார்.

மருது பாண்டியர் வரலாறு கவியரசு கண்ணதாசனால் 'சிவகங்கைச் சீமை' என்னும் பெயரில் படமாக்கப்பட்டது. நல்ல நடிப்பு, நல்ல வசனம், நல்ல பாடல்கள் எல்லாமே இருந்தும் வண்ணமில்லாப் படமாக இருந்ததாலும், அப்போது ஓடிய சிவாஜியின் கட்டபொம்மனுக்கு இருந்த விளம்பரம் போன்ற சில அம்சங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாததாலும் அது அதற்கு முன்னால் நிற்க முடியாமல் போய்விட்டது. 
அது பாக்ஸ் ஆ·பீஸ் தோல்வியாக இருந்தாலும் பிராபல்யம் இல்லாது போய்விட்டாலும் அது ஒரு Masterpiece; Film Classic
பாக்ஸ் ஆ·பீஸ் தாக்கத்தை வைத்து எதையும் நிர்ணயித்து விடக் கூடாது. 
கமலஹாசன் நினைத்த மாதிரி கான் சாகிபின் வரலாற்றைப் படமாக்க முடியவில்லை. 
        நல்லவேளை. இல்லையென்றால் கான் சாஹிபைக் குதறிப் போட்டு கொத்துப் புரட்டாவாக்கி கையேந்து விலாஸில் ப்லாஸ்டிக் பேப்பரில் வைத்துக் கொடுத்திருப்பார்.
கட்டபொம்மு வரலாற்றில் பல Versions நிலவுகின்றன என்றும் சொன்னேன். 
அவற்றில் ஒரு version-ஐப் பார்ப்போம்..............
அடுத்த மடல்களை எதிர்பாருங்கள்..........

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


No comments:

Post a Comment